கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் விஜய் நடித்த சுறா திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சுறா. கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் முக்கிய வேடத்தில் வடிவேலு நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய்யின் 50ஆவது படமாக ‘சுறா’ படம் வெளியானது. ஆனால், திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றதுடன், படத்தில் இடம்பெறும் லாஜிக்கற்ற காட்சிகள் கேலிக்கும் உள்ளாக்கப்பட்டது. பல மிகச்சிறந்த படைப்புகளில் விஜய் பங்காற்றியிருந்தாலும், சுறா படம் ரீ-ரிலீஸ் என்னும் தகவல் அவரது ரசிகர்களுக்கே ஆச்சரியத்தைத் தந்துள்ளது.
விஜய்க்குத் தமிழகத்தில் மட்டுமின்றி உலகமெங்கிலும் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் கேரள ரசிகர்களின் சொந்த ‘விஜய் அண்ணா’வாக பலரது மனத்திலும் அவர் தங்கி நிற்கிறார். இதனால்தான் கேரளாவிலும் விஜய் நடித்து வெளியாகும் திரைப்படங்கள் வசூலை அள்ளுகிறது. இந்த நிலையில் ‘சுறா’ வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் கொண்டாடும் விதமாகப் படம் மீண்டும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
First Re Release of the Decade 😊#SURA Re Release Tickets ready Nanbans 👍
Re Release on January 26th, 8am @ Kollam GMAX Cinemas 🔥
For tickets contact: 9746661208, 9745860130#KollamNanbans @actorvijay pic.twitter.com/8eoJpQaC1v
— Kollam Nanbans (@KollamNanbans) January 12, 2020
கேரளாவின் கொல்லத்தில் அமைத்துள்ள ஜீமேக்ஸ் திரையரங்கில் குடியரசு தினத்தை ஒட்டி சுறா திரைப்படம் மீண்டும் ரிலீஸாகவுள்ளது.
அதற்கான டிக்கெட்டுகளை இப்போதே வாங்க தொடங்கிய கேரள விஜய் ரசிகர்கள், அவற்றைப் பெருமையுடன் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.�,”