dபாடம் கற்றுக் கொடுக்கும் பட்சி ராஜன்

entertainment

கொரானோ வைரஸ் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒட்டுமொத்த இந்தியாவை 21 நாட்கள் முடக்கி வைப்பதற்கு நாட்டின் பிரதமர் மோடி மக்களிடம் வேண்டுகோள் வைத்து அதனை அமல்படுத்தி உள்ளார்.

இதன் காரணமாக வருவாய் இழப்பு, வேலையின்மை என பல்வேறு சிரமங்களுக்கு இந்திய மக்கள் ஆளாகியுள்ளனர். வேகமாகப் பரவி வரும் தொற்றுநோயின் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நிதி ஆதாரங்களை தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதற்காக மத்திய மாநில அரசுகள் ஒரே நேரத்தில் நிவாரண நிதி வழங்குமாறு பொதுமக்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள் என அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன்படி சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். தெலுங்குத் திரையுலகில் முதலில் அதிகபட்சமாக நடிகர் பவன் கல்யாண் 2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார். மத்திய அரசுக்கு 1 கோடி, ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகளுக்கு தலா 50 லட்சம் என அவர் பிரித்துத் தருகிறார். மேலும், சிரஞ்சீவி , மகேஷ் பாபு தலா 1 கோடியும், ராம் சரண் 70 லட்ச ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்குவதாக நேற்று(மார்ச் 28) அறிவித்தார். இது இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் மத்தியில் அதிர்வலைகைளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் தயாராகும் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிப்படங்களில் அதிக சம்பளம் வாங்குவது நடிகர் ரஜினிகாந்த். இந்தி படங்களின் கதாநாயகர்களின் சம்பளம் அப்படத்தின் வசூல் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால் என்ன சம்பளம் என்பதை முதலில் தீர்மானிக்க முடியாது. அக்‌ஷய் குமார் இந்தியில் கதையின் நாயகனாக நடிக்க கூடியவர். இந்தியில் நாயகனாக நடித்த இவர், 2.0 படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். இவரது அதிகபட்ச சம்பளம் 40 கோடிக்கு மேல் இல்லை என்கிற நிலையிலும் கொரேனா தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவம் உணர்ந்து 25 கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருப்பது இந்திய சினிமா அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அக்‌ஷய் குமார் மக்கள் நலன்கருதி 25 கோடி ரூபாய் அளித்துள்ள நிலையில் அடுத்த முதல்வர் கனவில் இருக்கும் தமிழ் திரைப்பட நடிகர்கள், தமிழர்களுக்கு பட்சிராஜனாக பரிச்சயமான அக்‌ஷய்குமாரிடம் இருந்து பாடம் படிக்க வேண்டும்!

**-இராமானுஜம்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *