‘சிம்பு ரெடின்னா நானும் ரெடி’: திரெளபதி இயக்குநர்!

entertainment

நடிகர் சிம்புவை கதாநாயகனாக்கி திரைப்படம் எடுக்க விரும்புவதாக திரெளபதி திரைப்படத்தின் இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திரைக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் திரெளபதி. ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்த இந்தத் திரைப்படத்தை மோகன்.ஜி இயக்கியிருந்தார். ஷீலா, கருணாஸ் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்த இந்தப்படத்தின் ட்ரெயிலர் வெளியான போதே பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. திரைப்படம் வெளியான பின்னரும், தான் எடுத்துக்கொண்ட கதைக்களம் மற்றும் கருத்துக்களின் காரணமாக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. எனினும் கிரெளட் ஃபண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டிருந்த இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் சாதனை புரிந்தது. கொரோனா தொற்றின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ‘திரெளபதி’ படக் காட்சிகளும் முடிக்கப் பட்டது.

இதுகுறித்து இயக்குநர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்திலும் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் ரிச்சர்ட் தான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று அறிவித்த இயக்குநர் மோகன், ஒரு நல்ல நாளில் தலைப்பு என்ன என்பது குறித்து தெரிவிப்பதாகவும் கூறினார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் “நீங்க, சிம்புவுடன் இணைந்து ஒரு திரைப்படம் எடுத்தால் மாஸாக இருக்கும். நீங்கள் தான் தைரியமான இயக்குநர். இது ஒரு நாள் நடக்கும்” என்று ட்விட்டரில் இயக்குநர் மோகனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த அவர், “சிம்பு ரெடின்னா நானும் ரெடி. ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் எனது அடுத்த படத்தை முடித்துவிட்டு சிம்புவிடம் இது குறித்துப் பேசப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *