லாஸ்லியா தந்தை மரணம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

entertainment

நடிகை லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு ஆறுதல் கூறி தேற்றும் வேலையில் ஈடுபட்டனர்.

கொரோனா காலகட்டத்தில் லாஸ்லியா இலங்கை செல்வதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பல தரப்பிலிருந்து கிடைத்த உதவியின் காரணமாக இலங்கைக்குச் சென்றுவிட்டார் லாஸ்லியா. ஆனால், அவரது தந்தை மரியநேசனின் உடல் கனடாவிலிருந்து இலங்கைக்கு வர தாமதமானதால் இறுதி சடங்குகள் இன்னும் முடியவில்லை. அதற்குள், லாஸ்லியாவின் தந்தையின் மரணம் குறித்து பல விதமான வதந்திகளை யூடியூப் ஸ்ட்ரீமர்கள் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், லாஸ்லியாவின் தந்தையின் மரணம் குறித்த விளக்கங்களை அவரது உறவினர்கள் சோஷியல் மீடியா மூலமாக வெளியிட்டு வருகின்றனர்.

மரியநேசனுடன் கனடாவில் பணிபுரிந்த, அவரது உறவினர் வெளியிட்டுள்ள வீடியோவில் “மரியநேசனின் மரணம் இயற்கையானது. கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக இருப்பதால் இங்கிருந்து உடலை அனுப்ப முடியவில்லை. மரியநேசனின் உடல் இலங்கைக்கு வர ஒன்றிலிருந்து இரண்டு வாரங்கள் வரை ஆகலாம். வேறு எந்தவிதமான பொய் செய்திகளையும் நம்பாதீர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரியநேசனின் இறுதி காரியங்களில் பங்குகொள்ள இந்தியாவிலிருந்து சென்ற லாஸ்லியாவின் நண்பர்கள் இந்தத் தாமதத்தை எதிர்பாக்காததால், ஓரிரு தினஙளில் திரும்பிவிடும் திட்டத்தில் சென்றனர். ஆனால், மரியநேசனின் உடல் வரத் தாமதமாகும் எனத் தெரிந்ததால் உடனடியாக இந்தியாவுக்குத் திரும்பியிருக்கின்றனர். கனடாவிலிருந்து மரியநேசனின் உடல் புறப்பட்டதும் வருவதாக உறுதியளித்துவிட்டு அவர்கள் இந்தியா திரும்பியிருக்கின்றனர்.

-முத்து-

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *