4மழை, குளிர்காலங்களில் அகோர பசி ஏற்படாத நிலையில், ரிலாக்ஸ் டைமில் எதையாவது கொரிக்க வேண்டும் என்கிற நினைப்பு பலருக்கு உண்டாகும். அப்படிப்பட்ட நேரத்தில் பிரதான உணவுக்கு முன்பு சாப்பிட உதவும் சிறு உணவைப் போல இந்த மீல் மேக்கர் மஞ்சூரியன் அமையும்.
**எப்படிச் செய்வது?**
சூடான நீரில் 250 கிராம் மீல் மேக்கரைப் போட்டு, ஐந்து நிமிடங்கள் கழித்து எடுக்கவும். அதை நன்குப் பிழிந்து துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய்விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் இரண்டு, பொடியாக நறுக்கிய தக்காளி இரண்டு, இஞ்சி – பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய குடமிளகாய் இரண்டு, உப்பு தேவையான அளவு, மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் இரண்டு ஸ்பூன், மீல் மேக்கர் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்கவிட்டு இறக்கவும்.
**சிறப்பு**
இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதச்சத்துகளை இதில் பெற முடியும். எளிதில் செரிமானகும் இது, அனைவருக்கும் ஏற்றது. புத்துணர்ச்சித் தருவது.�,