அமைப்புசாரா ஊழியர்களுக்கான பி.எஃப்!

அமைப்புசாரா துறையில் நுழையும் புதிய ஊழியர்களுக்கான ஊழியர் சேம லாப நிதியில் (ஈ.பி.எஃப்.) முழுப் பங்களிப்பையும் மத்திய அரசே ஏற்க முடிவு செய்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.
மார்ச் 29ஆம் தேதியன்று டெல்லி சாஸ்திரி பவனில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், "பிரதான் மந்திரி ரோஜ்கார் புரோட்சாகன் யோஜனா திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.6,500 கோடி வரை உயர்த்தப்பட்டு ரூ.10,000 கோடியாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏப்ரல் 2016க்குப் பிறகு இணைந்த ஊழியர்களுக்கு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 8.33 சதவிகிதம் ஊழியர் சேம லாப நிதி வழங்கப்பட்டு வருகிறது.