சமையல் சிலிண்டர் விலை உயர்வு!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 59 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாலும், ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாலும், மானிய விலையில் வழங்கப்படும் சமையல் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்திற்கு ஒரு முறை சமையல் எரிவாயுவின் விலை மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி, தேசியத் தலைநகர் டெல்லியில் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.2.89 உயர்த்தப்பட்டு, ரூ.502.4 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் சிலிண்டரின் விலை ரூ.1.49 உயர்த்தப்பட்டு ரூ.499.51 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.