பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டவர்களில், அந்நிகழ்ச்சி முடிந்த பிறகும் பிசியாக இருப்பவர் அபிராமி மட்டும் தான். தொடர்ந்து ஃபோட்டோஷூட்களில் கலந்துகொள்ளும் அபிராமி, ட்விட்டரின் டிரெண்டிங் டேபிளை கலக்கிக்கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் கவனம் செலுத்தாமல், மாடல் துறையிலேயே இருப்பதற்கான காரணம் குறித்து விசாரித்தோம்.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியையும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது என்பதில் அபிராமி தெளிவாக இருக்கிறாராம். நேர்கொண்ட பார்வை படத்தில் கிடைத்தது போன்ற பெயர் தான் நிலைக்கும் என்று அபிராமிக்கு திரையுலகினர் சிலர் அட்வைஸ் செய்திருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படுத்திய குணங்களுக்காகவும், அங்கு நடைபெற்ற சில உணர்ச்சிவசப்படும் கான்சப்டுகளையும் நம்பி எந்தத் திரைப்படத்திலும் கமிட் ஆக வேண்டாம் எனவும் அவருக்கு பெரிய இடத்திலிருந்து அட்வைஸ் வழங்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், ஆர்வக்கோளாறில் எந்தத் திரைப்படத்திலும் அபிராமி கமிட் ஆகாமல், மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் தொடர்ந்து ஃபோட்டோஷூட்களில் பங்கேற்று அட்டகாசமான ஃபோட்டோக்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.
அபிராமிக்கு நெருங்கிய வட்டாரம் கொடுக்கும் தகவலின்படி, ரஜினியின் படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை அபிராமியுடன் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இது உண்மையாக இருந்தால், சிறுத்தை சிவா இயக்கும் ரஜினியின் 168ஆவது திரைப்படத்தில் அபிராமியையும் பார்க்கலாம்.
�,”