rதனுஷ்-அனிருத்: விரைவில் ‘கொலவெறி’ கூட்டணி!

public

தனுஷ்-அனிருத் என்ற ‘கொலவெறி’ கூட்டணி தமிழ் சினிமாவில் எத்தனையோ சாதனைகளை செய்தன. தொடர்ந்து ஹிட் கொடுப்பதிலிருந்து, டாப் பேக்கிரவுண்டு மியூசிக்கை கொடுப்பது வரை இந்த இருவரது கூட்டணி உருவாக்கிய பாடல்கள்போல மீண்டும் பாடல்கள் தேவை என்ற ஆசை இவர்களது ரசிகர்களுக்கு எப்போதும் உண்டு. அந்த ஆசை விரைவில் நிறைவேற்றப்படும் என அனிருத் கூறியிருப்பது, ரசிர்களிடையே மகிழ்ச்சி அலையை உருவாக்கியிருக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கும் தனுஷுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும், அதில் தனுஷுக்கு எதிராக அனிருத் பேசியதாகவும், அனிருத்தால் தனுஷ் வளர்ந்தாரா? தனுஷால் அனிருத் வளர்ந்தாரா? எனப் பிரச்சினை உருவாகியதாகவும் பலவாறு பேசப்பட்டது. ஆனால், அத்தனை விமர்சனங்களையும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் திருமணத்தில் இருவரும் உடைத்தனர். தோள் மீது கைபோட்டுக்கொண்டு ‘கொலவெறி’ பாடலை தனுஷ்-அனிருத் பாடியதும், பிஹைண்ட்வுட்ஸ் இணையதளத்துக்கு அனிருத் அளித்த பேட்டியில், “நாங்கள் வேண்டுமென்றே தான் பிரேக் எடுத்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக காலம் பிரேக் நீடித்துவிட்டதால் பல கதைகள் உருவாகிவிட்டன” என்று விளக்கியதும் பல விமர்சனங்களை மூட்டைகட்டி வைத்தது.

அடுத்தமுறை இவர்கள் இருவரும் இணையும் வாய்ப்பு குறைவு என்று பேசப்பட்ட நிலையில், ரசிகர்களுடன் அனிருத் ஈடுபட்ட ட்விட்டர் உரையாடலில் “தனுஷ்-அனிருத் கூட்டணி எப்போது அமையும்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அனிருத் “விரைவில் நடக்கும். அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன” என்று கூறியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *