நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் தினந்தோறும் உரையாற்றி வருகிறார். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உணவு பற்றாக்குறை, அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றியும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி விஷயங்கள் குறித்தும் விரிவாக பேசுகிறார்.
இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்துதான் ஜெயரஞ்சன் இன்றும் பேசினார். அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் புதிய கல்விக் கொள்கை, கல்வியை எப்படி வலுப்படுத்தும் என்று சொல்லாமல் வெறும் பாராட்டுப் பத்திரம் மட்டுமே வாசித்துள்ளதாக அவர் விமர்சித்தார்.
மேலும், புதிய கல்வி கொள்கையில் பாசாங்கு, போலித் தனத்தை விட்டுவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வாருங்கள் என்பதை முக்கிய சாரம்சமாகக் கொண்டு குரு சரண் தாஸ் எழுதிய கட்டுரையை விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட ஜெயரஞ்சன், அதுபற்றி விரிவாக பேசினார்.
**முழுக் காணொலியையும் கீழே காணலாம்**
�,”