tதேவையில்லாமல் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டாம்!

politics

லேசான அறிகுறி உள்ளவர்கள் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டாம் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நோய் தொற்று அதிகமாகப் பரவி வருவதால், முன்னெச்சரிக்கையாக பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா அறிகுறிகள் தென்பட்டவுடன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால், அதில் குழப்பமான முடிவு ஏற்படும்பட்சத்தில் சிடி ஸ்கேனை செய்ய தனியார் மருத்துவமனைகள் அறிவுறுத்துகின்றனர். கொரோனா தொற்று உறுதியாகிவிட்டால், ரத்தப் பரிசோதனை, சிடி ஸ்கேன் போன்றவை எடுக்கப்படுகிறது. தேவையில்லாமல் பலரும் சிடி ஸ்கேன் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் 30-40 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் சிடி ஸ்கேன் செய்தும், சிலருக்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அவசியம் இல்லாமல் போகிறது. லேசான அறிகுறி உள்ளவர்கள் நோய் தொற்றைக் கண்டறிய சிடி ஸ்கேன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். சிடி ஸ்கேனுக்கும், லேசான அறிகுறி உள்ளவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும்.

ஒருமுறை சிடி ஸ்கேன் எடுப்பது 300-400 முறை மார்பக எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். இது எதிர்காலத்தில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

அதுபோன்று ஸ்டீராய்டு மருந்துகளை தொற்று ஏற்பட்ட ஆரம்பத்திலே எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆரம்ப கட்டத்திலே ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்வதால், கொரோனாவுக்கு கூடுதல் வலிமை கொடுக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், லேசான அறிகுறி உள்ள பல நோயாளிகள், பின்னர் தொற்று பாதிப்பு அதிகமாகி நிமோனியா ஏற்படுவதாக கூறுகின்றனர். தொற்று ஏற்பட்ட ஐந்து, ஆறு நாள்கள் வரை ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் வராது. தொற்று தீவிரமாக இருக்கும்போதுதான் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் ஆக்சிஜன் சிகிச்சை உள்ளிட்ட பல கட்ட சிகிச்சைகளுக்கு பிறகுதான் ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

**வினிதா**

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *