”பக்கத்துல இல்லாம போயிட்டேனே…”- மனைவியை இழந்து கதறும் அமைச்சர்

politics

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசனின் மனைவி மாரடைப்பு காரணமாக காலமானார்.

திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசனின் மனைவி பவானி காலமானதால் கடலூர் மாவட்ட திமுக சோகத்தில் மூழ்கியுள்ளது.

சுமார் 38 வருடங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் ஓகளூர் கிராமத்தைச் சேர்ந்த பவானியைத் திருமணம் செய்தார் கணேசன். அதன் பிறகுதான் அரசியலில் அசுர வளர்ச்சியடைந்தார். ஒன்றிய சேர்மன், எம் எல் ஏ, எம் பி, மாவட்ட சேர்மன் தற்போது தமிழக அமைச்சராக பணிபுரிகிறார். மனைவி வந்த பிறகே இத்தனை உயர்வுகளும் வந்ததால் மனைவியை மிகவும் நேசித்து வந்தார் அமைச்சர்.

கணேசன்- பவானி தம்பதிக்கு கவிதா லட்சுமி, கனிமொழி, கலையரசி, சிந்துஜா என்ற நான்கு பெண் பிள்ளைகளும், வெங்கடேஷ் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மூத்த மகள் கவிதா லட்சுமி ஒரு ஆண்டுக்கு முன்புதான் கொரோனா வைரஸ் தொற்றால் காலமானார்.

விருத்தாசலம் விஐபி நகரில் அமைச்சர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். வீட்டில் மருமகள் பூங்காவனமும் மனைவி பவானி மட்டுமே இருந்துள்ளனர். கடந்த சில தினங்களாக , பவானி உடல் நிலை சரியில்லாமல் மாத்திரை மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். நேற்று அமைச்சரும் அவரது மகனும் சென்னையில் இருந்துள்ளனர். இரவு பவானி சாப்பிட்டுவிட்டு பெட் ரூமில் உறங்க போய்விட்டார். மருமகள் பூங்காவனம் அவரது பெட் ரூமுக்கு போய்விட்டார்.

இன்று டிசம்பர் 9ஆம் தேதி காலை 8.00 மணிக்கு மருமகள் பூங்காவனம், அத்தை இன்னும் எழுந்திருக்க வில்லையே என்ற யோசனையோடு சென்று எழுப்பியுள்ளார். ஆனால் பவானி எழுந்திருக்கவில்லை. உடனே டாக்டர் சங்கவியை (முன்னாள் எம். எல். ஏ. குழந்தை தமிழரசன் மகள்) வரவழைத்து பரிசோதனை செய்தபோது அவர்தான் பவானி இறந்துவிட்டதை கண்ணீருடன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

பதறிபோன பூங்காவனம் மாமனார் மற்றும் கணவருக்கு தகவல்கள் தெரியப்படுத்தியதும் கதறிக்கொண்டு சென்னையிலிருந்து புறப்பட்டு விட்டார்கள். காலை 9 மணி முதல் பொதுமக்களும் கட்சியினரும் அமைச்சரின் மனைவி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

“எனக்கு அந்தஸ்து பதவியெல்லாம் கிடைக்க காரணமா இருந்த உன்னை கவனிக்காமல் விட்டுவிட்டேனே. கடைசி நேரத்துல உன் பக்கத்துல இல்லாம போயிட்டேனே?’ என்று மனைவி உடல் அருகே கதறியது பார்ப்பவர்களை உருக வைத்தது.

**-வணங்காமுடி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *