mமூன்று மாத வாடகை ரத்து? அரசுக்கு உத்தரவு!

public

வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது எனத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியதால், வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், மகாராஷ்டிராவில் மூன்று மாதங்களுக்கு வாடகை வசூலிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. வாடகைதாரர்களிடம் வாடகை கேட்டு வற்புறுத்தினாலோ அல்லது வசூலித்தாலோ, காலி செய்ய நிர்பந்தித்தாலோ வீட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் வீட்டு வாடகையை அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில், ஒரு மாத வாடகையை வசூல் செய்யக் கூடாது என்று அரசாணை வெளியிடப்பட்டும், அந்த உத்தரவுகள் அனைத்தும் ஏட்டு அளவிலேயே உள்ளன. தமிழக அரசு பிறப்பித்த அரசாணை விவரத்தைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் விதமாக விளம்பரம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாடகைதாரர்களிடம் இருந்து மூன்று மாதத்துக்கான வாடகையை வசூலிக்கக் கூடாது என்று அனைத்து நில, வீட்டின் உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் நேற்று (ஜூலை 2) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் பதிலளிக்க போதிய அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கு குறித்து தமிழக அரசு இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

**எழில்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *