பிகார்: மின்னல் தாக்கி 20 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு

public

பிகாரில் கனமழை பெய்து கடந்த வாரம் இடி, மின்னல் தாக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் நேற்று (ஜூலை 2) ஒரே நாளில் இடி, மின்னலுக்கு 20 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிகார், ஜார்க்கண்ட், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.

இந்த நிலையில், பிகாரில் நேற்று ஒரே நாளில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் மின்னல் தாக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

பிகார் மாநிலத்தின் சில பகுதிகளுக்கு மேலும் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

**ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *