mசாத்தான்குளம் வழக்கில் அரசியல் தலையீடா?

public

)

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் தந்தை மகன் போலீஸ் விசாரணையில் தாக்கப்பட்டு மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. ஐஜி சங்கர் தலைமையிலான 12 குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று (ஜூலை 3) மதியம் செய்தியாளர்களை சந்தித்த ஐஜி சங்கர், ”புதிய சிசிடிவி காட்சிகள் சில எடுக்கப்பட்டுள்ளன. நேற்றுதான் ரிமாண்ட் நடவடிக்கைகள் முடிந்தது. அடுத்ததாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு நடத்தவுள்ளோம். சிபிசிஐடியின் 12 குழுக்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆப் போலீசிடமும் விசாரணை நடத்தப்படும். சம்பவத்தன்று இருந்தவர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம்.

இவ்விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறப்படுவது தவறு. நேர்மையான நியாயமான விசாரணை நடைபெற்று வருகிறது. காவலர் முத்துராஜை பிடித்து வைத்திருப்பதாக கூறப்படுவது கற்பனையான ஒன்று. அவரை தீவிரமாக தேடி வருகிறோம் விரைவில் கைது செய்து விடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *