சாத்தான்குளம்: காவலர் முத்துராஜ் சிறையில் அடைப்பு!

public

(

சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ் இன்று (ஜூலை 4) சிறையில் அடைக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் , சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசாரை சிபிசிஐடி அடுத்தடுத்து கைது செய்து வருகிறது. முதலில், கைது செய்யப்பட்ட எஸ்ஐ ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றம் உத்தரவின் பேரில் போலீசார் சிறையில் அடைத்தனர்.

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய காவலர் முத்துராஜ் தலைமறைவானார். அவரை தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்தது.

நேற்று மதியம் காவலர் முத்துராஜ் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் செல்பேசிக்கு தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. முத்துராஜ் கடைசியாக பேசிய செல்பேசி எண் சிக்னலை வைத்து தேடியபோது அவர் விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பீர் முகைதீன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். இன்று காலை காவலர் முத்துராஜிடம் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். காவலர் முத்துராஜுக்கு ஜூலை 17ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். இதையடுத்து முத்துராஜ், சிறையில் அடைக்கப்பட்டார்.

**கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *