அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்போ திங்கள் கிழமை இரவு செய்தியாளர்களிடம், சீன செயலிகளான டிக்டாக் உள்ளிட்ட சில செயலிகளை தடை செய்யும் எண்ணம் இருப்பதாக கூறி உள்ளார். தடை குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாகவும் பாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் சீனாவுடனான கொள்கைகளில் வேறுவிதமான பாதை இனி மேற்கொள்ளப்படும் எனவும், இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த கொள்கைகள் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதுடன் அரசியல் சுதந்திரத்தையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது அவ்வாறு நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
சீன நிறுவனத்தின் பிரபல பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் ஹாங்காங்கில் செயல்படுவதை நிறுத்திக் கொண்டுள்ளது. சீனாவின் புதிய பாதுகாப்பு கொள்கையை தொடர்ந்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 29-ஆம் தேதி டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசாங்கம் தடை விதித்தது. இந்திய குடிமக்களின் தகவல்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அப்போது தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த முடிவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டிஜிட்டல் ஸ்ட்ரைக் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
** – பவித்ரா குமரேசன் * *�,”