உலக அளவில் சிசிடிவி கேமராக்களை அதிகம் பயன்படுத்தும் முதல் 20 நகரங்களில் 16ஆவது இடத்தில் ஹைதராபாத் நகரம் இருப்பதாக இங்கிலாந்து நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் கம்பாரிடெக் எனும் நிறுவனம் இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை தெலங்கானா மாநில காவல் துறை தலைவர் மகேந்தர் ரெட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் உலக அளவில் 16ஆவது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் ஹைதராபாத் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் முழுவதும் மூன்று லட்சம் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்புக்குப் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சீனாவின் தையுவான் நகரம் 4,65,255 சிசிடிவி கேமராக்களுடன் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-ராஜ்**�,