Kஇன்று பாதிப்பு 5,175: 112 பேர் பலி!

public

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 5) கொரோனா தொற்றால் புதிதாக 5,175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 59,156 பேருக்கு உட்பட இதுவரை 28,45,406 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 5,175 பேர் உட்பட இதுவரை 2,73,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இன்று மட்டும் 6,031 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,14,815 ஆக அதிகரித்துள்ளது. இன்று 112, பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மூன்றாவது நாளாக இன்று 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 54,184 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையைப் பொறுத்தவரை இன்று, 1,044 பேர் உட்பட மொத்தமாக 1,05,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 25 பேர் உட்பட இதுவரை 2,227 பேர் உயிரிழந்துள்ளனர்.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *