தமிழகத்தில் இரண்டாவது நாளாகத் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கு கீழாகக் குறைந்துள்ளது. இன்று புதிதாக 1,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாகத் தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று, 1,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு, 7,56,372ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,494 பேர் உட்பட இதுவரை 7,27,752 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று 12 பேர் உட்பட இதுவரை 11,466 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 17,154 ஆகக் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 509 பேர் உட்பட இதுவரை 2,08,179 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாக இன்று கோவையில் 182 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 46,237 ஆக அதிகரித்துள்ளது
**பிரியா**�,