கேரளாவுக்கு 2 நாள் பயணமாக வந்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது பரபரப்பான கால அட்டவணையில் இருந்து ஓய்வு எடுத்து கொல்லத்தில் மீனவர்களுடன் கடலுக்குள் சென்று, மீன்பிடித்தது இந்தியா முழுவதும் பலரிடம் வியப்பை ஏற்படுத்தியது. இது ராகுல்காந்தியின் தேர்தலுக்கான நாடக அரங்கேற்றம் என்றே கேரளா கம்யூனிஸ்ட் , பாஜகவினர் விமர்சனம் செய்துள்ளனர்.
கேரளாவுக்கு வந்த ராகுல் காந்தி புதன்கிழமை கொல்லம் அருகே வாடி கடற்கரையிலிருந்து அதிகாலை 5.15 மணியளவில் மீனவர்களுடன் படகில் புறப்பட்டார். காலை 7.45 மணியளவில் கரை திரும்பினார். அவர் மீனவர்களுடன் வலைவீசி அவர்களுடன் மீன்பிடித்தலிலும் ஈடுபட்டார். நீல நிற சட்டை மற்றும் காக்கி கால்சட்டை அணிந்திருந்த ராகுல் படகில் இருந்து பார்வையாளர்களுக்கு கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். உடன்
ஏ.ஐ.சி.சி பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் மற்றும் தேசிய மீனவர் காங்கிரஸ் தலைவரான டி என் பிரதாபன் எம் பி ஆகியோரும் அவரது கடல் பயணத்தின் போது சென்றனர்.
மீனவர்களுடன் பேசிய ராகுல் காந்தி
எப்போதும் மீனவர்களின் வாழ்க்கையை அனுபவிக்க விரும்புவதாகக் கூறியிருக்கிறார்.
#RahulGandhi in Arabian Sea with fishermen pic.twitter.com/7Ihi4zFYfP
— Manickam Tagore .B🇮🇳✋மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 25, 2021
“புதன்கிழமை அதிகாலையில் நான் என் சகோதரர்களுடன் கடலுக்குச் சென்றேன். படகில் சென்று திரும்பி வந்த தருணத்திலிருந்து அவர்கள் முழு ஆபத்தையும் அவர்களின் முழு உழைப்பையும் எடுத்துக் கொண்டது வியப்பாக இருந்தது. அவர்கள் கடலை நம்பி வலையை வாங்கினார்கள்.ஆனால் வேறு யாரோ லாபம் பெறுகிறார்கள்” என்றார் ராகுல் காந்தி.
நாங்கள் மீன் பிடிக்க முயற்சித்தோம் ஆனால் ஒன்று மட்டுமே கிடைத்தது. இந்த முதலீட்டில் கூட நிகர காலியாக வந்தது. இது எனது அனுபவம் என்று அவர் மேலும் கூறினார்.
டெல்லியில் விவசாயிகளுக்கு ஒரு அமைச்சகம் இருப்பதைப் போலவே இந்திய மீனவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைச்சகத்தை உருவாக்கவேண்டும் என ராகுல் பேசினார். இதனால் மீனவர்கள் பிரச்சினைகளை பாதுகாக்கமுடியும் என்றார்.
கடந்த சிலவாரங்களுக்கு முன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த ராகுல் கிராமசபைகூட்டம் கல்லூரி மாணவிகளிடம் விவாதம் போன்றவைகளை செய்து இப்போது கேரளாவில் மீனவர்களுடன் கடலில் மீன்பிடித்தது ஒரு விளம்பரம் தேடல் தேர்தலுக்கான நாடக அரங்கேற்றம் என்றே கேரளாவில் கம்யூனிஸ்ட் , பாஜகவினர் தெரிவித்தனர்.
**-சக்தி பரமசிவன்**
�,”