ஒருபக்கம் கோடையைப் பழித்தாலும், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் இந்த சூழ்நிலையில் விதம்விதமான குளிர்பானங்களைக் குடிக்கும்போது கோடையும் பிடித்துப்போகும். அதற்கு இந்த குலுக்கி சர்பத் உதவும். இந்த ஜூஸை உங்களுடைய வீட்டிலேயே போட்டு குடித்து பாருங்கள். சூப்பர் எனர்ஜி உடனடியாக கிடைக்கும்.
**எப்படிச் செய்வது?**
எலுமிச்சைத் துண்டுகள் 3, கீறிய பச்சை மிளகாய் ஒன்று, புதினா இலைகள் சிறிதளவு, சர்க்கரை தண்ணீர் 2 டேபிள்ஸ்பூன், ஊறவைத்த சப்ஜா
விதைகள் ஒரு டேபிள்ஸ்பூன், ஐஸ் வாட்டர் 400 மில்லி… இவை அனைத்தையும் மூடிபோட்ட, வெளியே கசியாத ஒரு பாட்டிலிலோ, ஷேக்கரிலோ ஒன்றாகச் சேர்க்கவும். நான்கைந்து முறை வேகமாகக் குலுக்கி, கண்ணாடி டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.
**சிறப்பு**
வெயிலுக்கு பச்சை மிளகாய் சேர்த்த சர்பத்தா என்று யாரும் பயப்பட வேண்டாம். பச்சை மிளகாயின் ஃப்ளேவர் மட்டும்தான் இதில் இருக்கும். அதோடு இந்த ஜூஸில் நாம் சேர்த்திருக்கும் சப்ஜா விதைகள் நம்முடைய உடலுக்கு பல மடங்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். எலுமிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.�,