அனைத்துக்கும் கணக்கு உள்ளது: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

politics

கணக்கில் வராத பணம் என்று எதுவும் இல்லை என லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜரான பின்னர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்சம் ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. வருமானத்திற்கு அதிகமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொத்து சேர்த்துள்ளதாக அவர் மீதும், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜயபாஸ்கருக்கு ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த 19ஆம் தேதி இரண்டாவது முறையாகச் சம்மன் அனுப்பியது.

இதையடுத்து அவர் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். நேற்று, எட்டு மணி நேரம் அவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் லஞ்ச ஒழிப்புத் துறை முன்பு விஜயபாஸ்கர் ஆஜரானார். இன்று அவரிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்குப் பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிகாரிகள் கேட்ட கேள்விக்குப் பதில் தெரிவித்தேன். அவர்கள் நெருக்கடி எதுவும் கொடுக்கவில்லை.

வழக்கு சம்பந்தமான ஆவணங்களைக் கொடுத்துள்ளோம். ஆவணங்கள் தொடர்பாகச் சந்தேகங்களைக் கேட்டனர். அதற்குப் பதில் அளித்தேன். மேலும் இந்த வழக்கு தொடர்பாகச் சம்மன் அனுப்பினால் மீண்டும் ஆஜராவேன். தன்னிடம் கணக்கில் வராத பணம் என்று எதுவுமில்லை அனைத்துக்கும் தன்னிடம் கணக்கு இருக்கிறது ”என்று கூறினார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *